Tuesday, August 14, 2007

தமிழ்மண நுழைவு தேர்வு முடிவு

நடந்து முடிந்த நுழைவுதேர்வில் ஆர்வமுடன் பலபேர் கலந்துக்கொண்டனர், தேர்வு முடிவு என்றாலே வழக்கம் போல் பெண்கள் தான் முதல் இடத்தை பிடிக்கின்றனர். அது போல்தான் இங்கேயும் நம்ம ஜெஸிலாதான் முதல் இடத்தை பிடிக்கிறார். அவரை அடுத்து இரண்டாம் இடத்தை நம்ம வெங்கட்ராமனும் மூன்றாம் இடத்தை நம்ம ராம் நான்காம் இடம் இம்சையும் பெற்று இருக்கிறார்கள்.

தினதந்தி முதல் பக்கம்
நடந்து முடிந்த நுழைவு தேர்வில் முதல் இடம் பெற்ற ஜெஸிலா போட்டோவும் பேட்டியும் இடம் பெற்று இருக்கிறது.

கேள்வி: இந்த வெற்றி எப்படி உங்களுக்கு சாத்தியமானது?

பதில் : ஆபிஸில் கிடைக்கும் சிறிது நேரத்தையும் கூட வீனாக்காமல் தமிழ் மணத்திலேயே செலவிட்டேன்.

கேள்வி:இதுக்கு பின்னால் யார் இருக்கா?

பதில்: என் பின்னால் யாரும் இருந்தால் தமிழ்மணதை படிக்க முடியாமல் போய் இருக்கும். அதனால் பின்னால் யாரும் இல்லை.

கேள்வி: முதல் மார்க் வாங்கிட்டீங்க அடுத்து உங்கள் லட்சியம் என்ன?
பதில்: டாக்டர் ஆவது தான் என் லட்சியம். (எல்லாம் அப்படிதானே சொல்லுவாங்க).


தினகரன் முதல் பக்க செய்தி
பல சோதனைகளையும் தாண்டி சாதனை புரிந்த மாணவர் வெங்கட்ராமன்.

கேள்வி : நீங்க அதிக அளவில் சோதனைகளை சந்தித்து இருக்கிறீர்களாமே அப்படி என்ன?

முதலில் லக்கி கிட்ட மாட்டினேன் என்ன காரணம் என்றே தெரியவில்லை அவரு என் மேல கோவமா ஆயிட்டார். அடுத்து இளவஞ்சிக்கிட்ட சிக்கிசின்னா பின்னமானேன், அவருக்கும் என் மேல என்ன கொலை வெறியோ தெரியல. இரண்டு நாள் ரூம் போட்டு அழுதேன் தெரியுமா? இப்படி பல சோதனைகலை கடந்துதான் இந்த சாதனையை செஞ்சு இருக்கிறேன்.

தினமலர் செய்தி.

ஆபிஸில் பார்ட் டைமாக வேலை பார்த்து, இரவில் கண் முழித்து வேலை பார்த்த இளைஞர் ராம் மூன்றாம் இடம் பிடித்து சாதனை.

கேள்வி: நீங்க இந்த வெற்றிய எதிர் பார்தீங்களா?

பதில்: ஜாகிர்கான் நன்றாக பால் போடும் பொழுதே வெற்றிய எதிர் பார்தேன். இந்தியா வெற்றி பெறும் என்று சொல்லி இருந்தேன்அது போலவே நடந்தது.

கேள்வி: நான் அத கேட்கலீங்க நீங்க மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து இருப்பதை கேட்கிறேன்?

பதில்: ஹோ அதுவா இது எல்லாம் சாதாரணம், எங்க ஊரில் நான் படிக்கும் பொழுது நான் தான் முதல் மார்க் வாங்குவேன். ஏன்னா நான் ஒருத்தவன் தானே எங்க ஊர் பள்ளி கூடத்தில் படித்தது.

கேள்வி: இந்த வெற்றிக்கு யார் யார் எல்லாம் காரணம்?

பதில் : எங்க மேனேஜர்தாங்க!

கேள்வி: எல்லாரும் அம்மா அப்பா டீச்சர் என்று சொல்லுவாங்க நீங்க வித்தியாசமா மேனேஜர் என்று சொல்றீங்க?

பதில்: ஆமாங்க அவருதானே என்ன ஆபிஸில் சும்மா உட்கார வச்சு இருக்கிறார் அதனால் தானே என்னால் படிக்க முடியுது. அப்ப அவருதானே காரணமாக இருக்க முடியும்.

மறு கூட்டலுக்கு விண்ணபங்கள் வரவேற்கபடுகின்றன. கட்டணம் $5000 செலுத்துபவர்களுக்கு முதல் மார்க் வழங்கபடும்.